கும்பகோணம், அக்.26- பாலஸ்தீனம் மீது மிகக் கொடூர மாக தாக்குதல் நடத்தி குழந்தைகள், பெண்கள் உட்பட அப்பாவி மக்களைக் கொன்று குவிக்கும் இஸ்ரேலைக் கண்டித்தும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிக்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், தாக்குதலை உடனடியாக நிறுத்தக்கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கும்பகோ ணம், அறந்தாங்கியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு மாநகரச் செயலாளர் கா. செந்தில் குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், சிஐடியு மாவட்ட தலை வர் எம்.கண்ணன், மாமன்ற உறுப்பினர் ஆ.செல்வம், மாவட்டக்குழு உறுப்பி னர் நாகராஜன், குடந்தை ஒன்றிய செயலாளர் கணேசன், பழ.அன்புமணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றி னர். அறந்தாங்கி புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி பேருந்து நிலையம் அருகே தாலுகாச் செயலாளர் எம்.நாராயண மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.கவிவர்மன் கண்டன உரையாற்றி னார். மாவட்டக்குழு உறுப்பினர் தென் றல் கருப்பையா, சிஐடியு ஒன்றிய ஒருங் கிணைப்பாளர் கர்ணா ஆகியோர் பேசி னர். தாலுகாக்குழு உறுப்பினர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்.