சென்னை, மே 10-
ஒன்றிய அரசின் கப்பல்போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கடல்சார் பல்கலைக் கழகம் இவ்வாண் டிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறி விப்பை வெளியிட்டுள்ளது.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பல்கலைக் கழக துணைவேந்தர் மாலினி வி.சங்கர் கடல்சார் பல்கலைக் கழ கம் வழங்கும் பாடத்திட்டங்கள் குறித்த தக வல்களை எடுத்துரைத்தார்.
தற்பொழுது இந்திய கடல்சார் பல்க லைக்கழகம் சென்னை, கொச்சி, கொல் கத்தா, மும்பை (2) விசாகப்பட்டினம் போன்ற இடங்களில் ஆறு வளாகங்களு டன் செயல்பட்டு வருகிறது. மேலும் 17 கடல்சார் பயிற்சி நிறுவனங்கள் இந்திய கடல் சார் பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்றுள்ளன என்றார்.
கப்பலில் பணிபுரிய விரும்பும் மாண வர்களுக்கு இந்திய கடல்சார் பல்கலை கழகம் பி.டெக். (மரைன் இன்ஜினியரிங்), பி.எஸ்சி. (நாட்டிகல் சயின்ஸ்), மற்றும் டிப்ளமோ இன் நாட்டிகல் சயின்ஸ் (டிஎன்எஸ்) போன்ற இளங்கலை கடல் சார் பாடத்திட்டங்கள் மாலுமி இரண்டாம் அதிகாரி, மூன்றாம் அதிகாரி மற்றும் தலைமைப் பொறியாளர் போன்ற முக்கிய பணிகளுக்கு மாணவர்களை தயார் படுத்துகிறது.
பிடெக். (லாஜீஸ்டிக்ஸ், ரீடெய்ல் மற்றும் இ-காமர்ஸ்) போன்ற இளங்கலை கடல்சார் அல்லாத பாடத்திட்டங்கள், கப்பல், கட்டிடக்கலைஞர், கப்பல் வடிவ மைப்பாளர், கப்பல் பாரமரிப்பு பொறி யாளர், மற்றும் கடல்சார் தளவாட மேலா ளர் போன்ற பணியிடங்களுக்கும் மாண வர்களுக்கு பாடத்திட்டங்கள் உள்ளன. என்று மாலினி சங்கர் கூறினார்,
பேட்டியின் போது பதிவாளர் கே.சரவ ணன், பல்கலைக்கழக டீன் மற்றும் சென்னை வளாக இயக்குநர் டாக்டர். ராஜூ பாலாஜி, மற்றும் சென்னை வளாக இயக்கு னர் காமேடோர் கே.டி. ஜோஷி (ஓய்வு) தேர்வுக் கட்டுப்பாட்டாளர்- மற்றும் நிதி அதிகாரி (பொ) எம். சரவணன் ஆகி யோர் உடனிருந்தனர்.