புதுக்கோட்டை, ஆக.3-
மணிப்பூர் மாநிலத்தில் நடை பெற்ற இனக்கலவரத்தையும், பாலி யல் வன்கொடுமைகளையும் கண் டித்து புதுக்கோட்டையில் மணிப்பூர் ஒருமைப்பாடு மக்கள் கூட்டமைப்பு சார்பில் 42 அமைப்புகள் சேர்ந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி-ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி யின மக்களை அழித்தொழிக்கும் இனக்கலவரமும், பாலியல் வன் கொடுமைகளும் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. இக்கொடுமையான சம்ப வத்தைக் கண்டித்து நாடு முழு வதும் உள்ள அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற னர்.
அதனொரு பகுதியாக புதுக் கோட்டையில் மணிப்பூர் ஒருமைப் பாடு மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்- பேரணி நடைபெற் றது. புதுக்கோட்டை சின்னப்பா பூங் காவில் இருந்து ஆட்சியர் அலுவல கம் வரை பேரணி நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு நகர்மன்ற முன்னாள் தலை வர் துரை.திவ்யநாதன் தலைமை வகித்தார். புதுக்கோட்டை திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே.செல்லப்பாண்டியன், சட்ட மன்ற முன்னாள் உறுப்பினர் கவி தைப்பித்தன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முருகேசன், சிபிஐ மாவட் டச் செயலாளர் த.செங்கோடன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயற்குழு உறுப்பினர்கள் கே. சண்முகம், எஸ்.ஜனார்த்தனன், நகர் செயலாளர் ஆர்.சோலையப்பன், விதொச மாவட்டச் செயலாளர் டி. சலோமி, மாதர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.பாண்டிச்செல்வி, செயலா ளர் பி.சுசிலா உள்ளிட்ட 42 அமைப்பு களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கா னோர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி யில் மணிப்பூரில் தொடர் வன்முறை கள், பாலியல் கொடுமைகள், தீ வைப்பு சம்பவங்கள், கொலைகள் உள்ளிட்ட கொடுமைகளைக் கண் டித்தும், மணிப்பூர் மாநில முதல மைச்சரை பதவி விலகக் கோரி யும், அங்கு அமைதியை ஏற்படுத்த தவறிய ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும், பொது சிவில் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக் கங்கள் எழுப்பப்பட்டன.