புதுக்கோட்டை, ஜன.31- புதுக்கோட்டை ஒன்றியம் மணவிடுதி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதிச் சட்டத்தின்கீழ் ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வழங்க வேண்டு மென அகில இந்திய விவசாயத் தொழிலா ளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது. விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டச் செயலா ளர் டி.சலோமி, மாவட்டக் குழு உறுப்பினர் சி.ராஜா, கிளைச் செயலாளர் ஞானசேகரன் உள்ளிட்டோர் புதுக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திரா காந்தியிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின்கீழ் ஆண்டுக்கு நூறு நாட்கள் வேலை வழங்க வேண்டும். ஆனால், புதுக்கோட்டை ஒன்றியம் மணவிடுதி ஊராட்சியில் இதுவரை 45 நாட்கள் மட்டுமே வேலை கொடுக்கப்பட்டு உள்ளது. மணவிடுதி ஊராட்சியில் 598 விவ சாயத் தொழிலாளர்கள் வேலை அட்டை வைத்திருந்தும், அவர்களுக்கு முறையான வேலை என்பது வழங்கப்படவில்லை. எனவே, சுழற்சி முறையில் இல்லாமல் தினந்தோறும் வேலை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் இந்திராகாந்தி தொடர்ந்து வேலை வழங்குவதாக உறுதியளித்தார்.