அறந்தாங்கி, செப்.16 - கட்டுமாவடியில் நடைபெற்ற பெண்கள் கபாடி போட்டியில் மதுரை அணி முதல் பரிசை வென்றது. புதுக்கோட்டை மாவட்டம் கட்டுமாவடி உப்பளத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, காந்தி கபாடி விளையாட்டு கழகம் சார்பில் 4 வது ஆண்டாக மாநில அளவிலான பெண்கள் கபாடி போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் பரணி கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 25-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இரவு-பக லாக நடந்த போட்டியில் மதுரை அணி முதல் பரிசை வென்றது. முதல் பரிசு பெற்ற அணிக்கு ரூ.30,000 பண மும், ஆள் உயர சுழற்கோப்பையும் வழங்கப் பட்டது. 2வது பரிசை பெற்ற சேலம் அணிக்கு ரூ.20,000 பணமும், சுழற்கோப்பையும், 3வது பரிசு பெற்ற திருச்சி அணிக்கும், 4வது பரிசு பெற்ற நாமக்கல் அணிக்கும் ரூ.10,000 பண மும் வழங்கப்பட்டது. சிறப்பு பரிசு மற்றும் ஆறுதல் பரிசு பெற்ற அணிகளுக்கும் நினைவு கோப்பைகள் வழங்கப்பட்டன. போட்டியை காந்தி கபாடி விளையாட்டு கழகத்தை சேர்ந்த மகேந்திரன் நடத்தினார். இப்போட்டியில் ஒன்றிய துணைத் தலைவர் சீனியார் மற்றும் அரசியல் பிரமுகர்கள், ஊராட்சி உறுப்பினர்கள், அறக்கட்டளை உறுப் பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.