திருவாரூர், ஏப்.28-
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம் சிபிஎம் உறுப்பினரும், தமுஎகச ஒன்றியச் செயலாளருமான வரத.வசந்த ராஜன், திருக்கொட்டாரம் கிளைச் செய லாளர் வரத.வசந்தபாலன் ஆகியோரின் தந்தை எம்.வரத ராஜன் திருநள்ளார் கொம்யூன் பஞ்சாயத்தில் அரசு ஊழி யராக இருந்து பணி ஓய்வு பெற்றார்.
இவருக்கான பணி ஓய்வு பாராட்டு விழாவில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன் கலந்து கொண்டு புத்தகம் வழங்கி வாழ்த்திப் பேசினார். பணி ஓய்வு பெற்ற எம்.வரதராஜன், தீக்கதிர் ஓராண்டு சந்தா தொகை வழங்கினார்.
நிகழ்ச்சியில் நன்னிலம் ஒன்றியச் செயலாளர் கே.எம்.லிங்கம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் டி.வீரபாண்டியன் உள்ளிட்ட மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.