கும்பகோணம், ஜூலை 8-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சி யார்கோவில் பகுதியில் பல்வேறு சமூகப் பணிகளில் லயன் சங்கம் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் 2023-24க்கான பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா நடைபெற்றது.
முன்னாள் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். லயன் சங்க துணை ஆளுநர் மணிவண்ணன், பார்வைக்கோர் பயணம் மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர்.
நாச்சியார்கோவில் லயன் சங்க தலைவராக இயற்கை விவசாயி ராஜேந்திரன், செயலாளராக முத்து, பொருளாளராக பாலமுருகன் ஆகியோர் பொறுப் பேற்றனர். 10, 11, 12 வகுப்புகளில் முதல் மதிப்பெண் பெற்ற 36 அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கப்பட் டது. கண்தானம் செய்தோரின் உறவினர்கள் கவுரவிக்கப் பட்டனர். பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்டன.