districts

திருச்சி முக்கிய செய்திகள்

பணம் கையாடலில் தலைமறைவான  பேரூராட்சி செயல் அலுவலர்  ஆஜராக வேண்டும் கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவு

கும்பகோணம்.ஜூலை 10- கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த  ஸ்ரீதரன் (வயது 55) என்பவர் தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கூர் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணிபுரிந்து வந்தார்  இவர்  கடந்த 2017- 2018 ஆம் ஆண்டில் பணிபுரிந்த போது மேலும் இரண்டு நபர்களுடன் சேர்ந்த ரூ.4,25,700 பணம் கையாடல் செய்த தாக தஞ்சாவூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் 09/2018 இன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு மதுக்கூர் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் அ.ஸ்ரீதரன் பலமுறை ஆஜராகவில்லை. கடந்த ஜூன் 19. ஆம் தேதி கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பிடிவாரண்ட் பிறப்பித்தது.  எனினும் அவர் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலை மறைவாக உள்ளதாக தெரிய வருவதால் கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் சண்முகப்பிரியா  கும்பகோணம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 19ஆம் தேதிக்குள் தலைமறைவு குற்றவாளி ஸ்ரீதரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தஞ்சை அருகே தொழிலாளியை கொன்றவர்களை பிடிக்க  தனிப்படைகள் அமைப்பு

தஞ்சாவூர், ஜூலை 10 -  தஞ்சாவூரில் திங்கள்கிழமை இரவு தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சிதம்பரம் மகன் ஸ்ரீராம் (27). மருத்துவக்கல்லூரி சாலையி லுள்ள மங்களபுரம் பகுதியில் ஜிகர்தண்டா கடையில் வேலை பார்த்து வந்த இவர் திங்கள்கிழமை இரவு மர்ம  நபர்களால் அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப் பட்டார். இது குறித்து மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக ளைப் பிடிப்பதற்காக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், துணைக் காவல் கண்காணிப்பாளர்கள் பி.என். ராஜா (தஞ்சாவூர் நகரம்), நித்யா (வல்லம்) மேற்பார்வையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வழக்கு தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளி களைப் பிடித்த பிறகுதான் இக்கொலைக்கான காரணம் தெரிய வரும் என காவல் துறையினர் தெரிவித்தனர். இதனிடையே, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஸ்ரீராமின் உடல் கூராய்வு செய் யப்பட்டு, உறவினர்களிடம் செவ்வாய்க்கிழமையன்று ஒப்படைக்கப்பட்டது.

சிறார்களை ஆபாசமாக படம் எடுத்து  இணையத்தில் பதிவேற்றியவருக்கு ஆயுள் தண்டனை

தஞ்சாவூர், ஜூலை 10 -  சிறார்களை ஆபாசமாக படம் எடுத்து இணையதளத்தில் பதிவேற்றியதற்காக சிபிஐ அலுவலர்களால் கைது செய்யப் பட்ட இளைஞருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூர் பூண்டித் தோப்பு பகுதியைச்  சேர்ந்தவர் விக்டர் ஜேம்ஸ் ராஜா (36). எம்.காம். முடித்துவிட்டு முனைவர் பட்டம் படித்து வந்த இவர் பல்வேறு நாடுகளில் உள்ள நண்பர்களுடன் இணைந்து சிறார் ஆபாசப் படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவதாக இண்டர்போல் மூலம் ஒன்றிய அரசுக்கு 2023 ஆம் ஆண்டில் தகவல் வந்தது. இதைத் தொடர்ந்து, சிபிஐ அலுவ லர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், விக்டர் ஜேம்ஸ் ராஜா 5 - 18 வயதுக்கு உள்பட்ட சிறுவர், சிறுமிகளைத் தொடர்ந்து 2 ஆண்டுக ளாக பாலியல் வல்லுறவு செய்து வந்ததும், சிறுவர் - சிறுமிகளைப் பாலியல் வல்லுற வில் ஈடுபடுத்தியதும், அவற்றை விடியோ வில் பதிவு செய்து இணையதளத்தில் வெளியிட்டு வந்ததும் தெரிய வந்தது. இதை யடுத்து, விக்டர் ஜேம்ஸ் ராஜாவை சிபிஐ  அலுவலர்கள் 2023, மார்ச் 7 ஆம் தேதி வழக்குப் பதிந்து, 16 ஆம் தேதி கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் பட்டது. இந்த வழக்கை நீதிபதி ஜி. சுந்தரராஜ்  விசாரணை நடத்தி ஜேம்ஸ் விக்டர் ராஜாவுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.6.54 லட்சம் அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமையன்று தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவர், சிறுமிக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

உலமாக்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்க அரசு மானியம்

திருச்சிராப்பள்ளி, ஜூலை, 10- திருச்சி மாவட்டத்தில் உள்ள வக்பு வாரியத்தில் பதிவு  செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் பணிபுரியும் உலமாக்க ளுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு. புதிய  இரு சக்கர வாகனம் வாங்க ஒரு நபருக்கு ஒரு வாகனத்திற்கு ரூ. 25000 (ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும்) அல்லது வாகனத்தின் விலையில் 50 சதவீதம் இதில் எது குறைவோ  அத்தொகை மானியமாக வழங்கப்படும்.  அரசின் மானிய விலைக்கு கூடுதல் செலவினம் ஏற்படும் பட்சத்தில் இத்தொகையினை பய னாளியே செலுத்த வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு வக்பு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனங்களில் மனுதாரர் விண்ணப்பிக்கும் நாளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும்.   திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்  18 முதல் 45 வயதுக்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.  விண்ணப்பிக்கும்போது இரு சக்கர வாகனம் ஓட்டும் கற்றுரைக்கான சான்றிதழ் (LLR பெற்றிருத்தல் வேண்டும்.  பதிவு செய்யப்பட்ட வக்பு நிறுவனத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் மானிய உதவி கோரி விண்ணப்பம் செய்தால்  பேஷ் இமாம், அரபி ஆசிரியர்கள் மோதினர். முஜாவர் என்ற முன்னுரிமை அடிப்படையில் ஒருவருக்கு மட்டும் மானியத் தொகை வழங்கப்படும்.  வாகனம் வாங்குவதற்கான விலைப்பட்டியல், விலைப்புள்ளி மற்றும் சம்மந்தப்பட்ட முத்தவல்லியிடம் எத்தனை ஆண்டுகள் வக்பில் பணிபுரிகிறார் என்ப தற்கான சான்று பெற்று வக்பு கண்காணிப்பாளர் மேலொப்பத்துடன்  மாவட்ட ஆட்சியர் வளாக இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து   தகுதியுடைய உலமா பணியாளர்கள் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.    மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். 

பாஜக அண்ணாமலை வசிக்கும்  பங்களாவுக்கு  லட்சக்கணக்கான ரூபாய் வாடகைப் பணம் எங்கிருந்து வருகிறது?

திருச்சிராப்பள்ளி, ஜூலை 10- திருச்சி அருணாச்சல மன்றத்தில் காங்கிரஸ் மாநில செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுச்சாமி புதனன்று  நிருபர்க ளுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;- பாஜக மாநில தலைவர் அண்ணா மலைதமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் செல்வப்பெருந்தகைக்கு 2001-ல் நடந்த ஒரு கொலை வழக்கு இருப்பதாக அபாண்டமாக சுமத்தியுள்ளார். இதை ஒரு பாமரன் வேண்டுமானால் சொல்லலாம். ஆனால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த அண்ணாமலை எந்த அடிப்படையில் இதை சொல்லியிருக்கிறார் என்று தெரிய வில்லை. செல்வப் பெருந்தகை மீது வழக்கு போட்டது உண்மை.ஆனால் பின்னர் நடைபெற்ற புலன் விசாரணையில் காவல்துறையே அவர் மீது பதிவு செய்த கொலை வழக்கை திரும்பப் பெற்றது. அண்ணாமலை உண்மையில் நேர்மையா னவராக இருந்தால் தான் வசிக்கக்கூடிய பங்களாவுக்கு செலுத்தும் லட்சக்க ணக்கான வாடகை பணம் எங்கிருந்து வருகிறது என சொல்ல வேண்டும். உண்மைக்கு புறம்பாக பேசிக் கொண்டிருக்கும் அண்ணாமலை பொய் பேசுவதை இத்தோடு நிறுத்த வேண்டும். இல்லை என்றால் மோசமான விளைவு களை சந்திக்க நேரிடும். இந்த செல்வப் பெருந்தகை விவகா ரத்தில் அண்ணாமலை என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? அந்த மேடையில் அமித்ஷா குறித்தும் நான் விவாதிக்க தயாராக இருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் பொருளாளர், முரளி, கோட்டத் தலைவர் வெங்கடேஷ் காந்தி ஆகி யோர் உடனிருந்தனர்.