districts

img

தேசிய வருவாய்வழி திறனறித் தேர்வில் வென்றவர்களுக்கு பாராட்டு

தஞ்சாவூர், மார்ச் 16-  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில், பட்டுக்கோட்டை டிஇஎல்சி அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில், தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், வழிநடத்திய தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.  பட்டுக்கோட்டை வட்டாரக் கல்வி  அலுவலர் எம்.கே.ராமமூர்த்தி வரவேற்றார்.  மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கு. திராவிடச் செல்வம் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட உதவி திட்ட  அலுவலர் வெ.கருணாகரன் உரையாற்றி னார். பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை ஆகியோர் பரிசுகள் வழங்கினர். இவ்விழாவில், 48 மாணவ-மாணவிகள், வட்டாரக் கல்வி அலுவலர்கள் 13 பேர், ஆசிரி யர்கள் 30-க்கும் மேற்பட்டோருக்கு நினைவுப்  பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார வளமைய  மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்று நர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரி யர்கள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள்  கலந்து கொண்டனர். ஒரத்தநாடு வட்டார தொடக்க கல்வி அலு வலர் க.செல்வகுமாரி நன்றி கூறினார்.