districts

சிபிஎம் அபிஷேகபுரம் பகுதிச் செயலாளராக கோ.சுந்தர்ராஜன் தேர்வு

திருச்சிராப்பள்ளி, நவ.17 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம்  அபிஷேகபுரம் பகுதிக்குழு  24 ஆவது மாநாடு  ஞாயி றன்று எடமலைப்பட்டி புதூரில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் குருநாதன், சிவா, கலை வாணி ஆகியோர் தலைமை  வகித்தனர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் வி.சேகர் ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கோவி. வெற்றிச்செல் வன் துவக்க உரையாற்றி னார். பஞ்சப்பூர் பாதாளச் சாக் கடை கழிவுநீர், கோரை ஆற்றிற்கு வந்து உய்யக் கொண்டான் ஆற்றில் கலந்து, அதன் வழியாக காவிரி ஆற்றில் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதாளச் சாக்கடை வேலை சில இடங்களில் முடிந்தும், சாலை அமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது. அதை உடனடி யாக சீரமைக்க வேண்டும். ஆர்.எம். எஸ்.காலனி, எட மலைப்பட்டிபுதூர், கிராப் பட்டி, பிராட்டியூர், ராமச் சந்திராநகர் மெயின் ரோடு,  சொக்கலிங்கபுரம் ஆகிய இடங்களில் பேருந்து நிறுத் தும் மற்றும் நிழற்குடை அமைக்க வேண்டும். பிராட்டியூர் பகுதிக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து இரண்டு பக்கமும் பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் உள்பட பல்வேறு  தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. அபிஷேகபுரம் பகுதி  செயலாளராக கோ.சுந்தர் ராஜ் உள்பட 9 பேர் கொண்ட  பகுதிக்குழு தேர்வு செய்யப் பட்டது. மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா நிறை வுரையாற்றினார். பகுதிக் குழு உறுப்பினர் பெருமாள் நன்றி கூறினார்.