அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே டூ அசோசியேசன் சார்பாக மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகள் நடை பெற்றன. அறந்தாங்கி வெஸ்ட்லி மெட்ரிகுலேஷன் பள்ளியில் நடைபெற்ற போட்டி யில், 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் ஹரிஹரன் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் குமார் போட்டிகளை துவங்கி வைத்த னர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், சென்னையில் ஜூலை 29, 30 அன்று நடைபெறவுள்ள மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.