மயிலாடுதுறை, ஜூலை 15 -
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி டி.இ.எல்.சி பிஷப் ஜான்சன் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலை வர் காமராஜர் பிறந்தநாள் விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் ஜான் சைமன் தலைமையில் நடைபெற்ற விழாவில் காமராஜர் பற்றாளர் ஆர். சௌந்தராஜன், தரங்கம்பாடி ஓசோன் லயன் சங்க தலைவர் நெடுமாறன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.சௌந்தரராஜன் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். காமராஜரின் வாழ்க்கை குறித்த நாடகங்கள், பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பரிசுகள் பெற்ற னர்.
ஸ்ரீவெங்கடேஸ்வரா பள்ளி
புதுக்கோட்டை, திருக்கோகர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் தமிழகத்தின் முன் னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாள் விழா நடைபெற்றது. பள்ளியின் ஆலோ சகர் அஞ்சலிதேவி தங்கம்மூர்த்தி, மேலாண்மை இயக்குநர் நிவேதிதா மூர்த்தி ஆகியோர் காமராஜர் குறித்து புகழுரை ஆற்றினர். பின்பு நடைபெற்ற வினாடி-வினா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டன.
மருதுபாண்டியர் கல்வி நிறுவனம்
கல்வி வளர்ச்சி நாள் மற்றும் பெருந் தலைவர் காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு தஞ்சை மருதுபாண்டியர் கல்வி நிறுவனத்தில் அவருடைய உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப் பட்டது. நிறுவனங்களின் தலைவர் கொ. மருதுபாண்டியன், கல்லூரி முதல்வர் முனைவர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் ப.சுப்பிர மணியன், துணை முதல்வர் முனைவர் ரா.தங்கராஜ், கல்லூரி மேலாளர் இரா.கண்ணன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.