திருச்சிராப்பள்ளி, ஏப்.24-
திருச்சி மாநகராட்சி 17ஆவது வார்டுக்கு உட்பட்ட கல்மந்தை காலனி பகுதியில் அனைவருக்கும் வீடு வழங்காததை கண்டித்தும் இடத்தை காலி செய்து கொடுத்த கல்மந்தை காலனி மக்கள் அனை வருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வீடு களை ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் கல்மந்தை காலனி பகுதி மக்கள் திங்களன்று பாலக்கரை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் காத்தி ருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன், மலைக்கோட்டை பகுதிச் செயலாளர் லெனின் ஆகியோர் விளக்கிப் பேசினர்.
பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தை யில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் கொண்டு திருச்சி கிழக்கு தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற் காலிகமாக கைவிடப்பட்டது.