கோட்டயம், ஜுன் 6-
உடல் உறுப்பு தானத்தில் 7 பேருக்கு புது வாழ்வு அளித்த கைலாஸ் நாத்தின் குடும்பத் திற்கு இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் உறுதுணை அளிக் கிறது. கைலாஸ் நாத்தின் குடும்பத்தின் உடனடி தேவை களை நிறைவேற்றியுள்ளது டிஒய்எப்ஐ. அன்பான சக ஊழி யரின் கனவை நனவாக்க டிஒய்எப்ஐ களம் இறங்கிய போது, அவரது சகோதரியின் படிப்பும் அடைக்கலமாக ஒரு வீடும் சாத்தியமாகின.
ஏப்ரல் 22ஆம் தேதி கார் விபத்தில் கைலாஸ்நாத் மூளைச்சாவு அடைந்தார். இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள், இரண்டு கண்கள்,கணையம்ஆகி யவை தானமாக பெறப்பட்டன. அப்பா, அம்மா, சகோதரி அடங்கிய குடும்பத்தின் ஒரே வருமானம் கைலாஷின் வேலைதான். இந்நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோட்டயம் மாவட்டக் குழு தலைமையில் சேகரிக்கப்பட்ட 21,50,600 ரூபாயை அமைச்சர் வி.என். வாசவன் மற்றும் இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஏ.ஏ.ரஹீம் ஆகியோர் குடும் பத்தினரிடம் வழங்கினர். கைலாஸ் நாத் தனது மறை வின் மூலம் ஏழு பேருக்கு புது வாழ்வு அளித்து என்றும் அழியாதவராகிவிட்டார் என்று அமைச்சர் வி.என்.வாசவன் கூறினார்.
நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஏ.வி.ரஸ்ஸல், மாநிலக் குழு உறுப் பினர் கே.அனில்குமார், டி.ஒய்.எப்.ஐ, அகில இந்திய செயற்குழு உறுப்பினர் ஜேக். சி.தாமஸ், மாவட்ட பஞ்சா யத்து தலைவர் கே.வி.பிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.