கும்பகோணம், அக்.17- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோ ணம் அருகே உள்ள திருபுவனம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு கட்டிட வசதி, விளையாட்டு மைதானம் மற்றும் அரசு கிளை நூலகத்திற்கு இடம் வேண்டும் என வலியுறுத்தி, சமூக நல அமைப்புகளின் கூட்டுக்குழு சார்பில் கோரிக்கை முழக்க பேரணி நடைபெற்றது. திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயம் முன்பிருந்து முக்கிய வீதி கள் வழியாக சென்ற பேரணியில், அனைத்து அரசியல் கட்சி பிரமு கர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். கோ ரிக்கை முழக்க பேரணிக்கு திருபு வனம் சமூக நல அமைப்புகளின் கூட்டுக்குழு தலைவர் சா.ஜீவ பாரதி தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராம்குமார், பொருளா ளர் உதயகுமார் உட்பட ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்தனர். பட்டுக்குப் புகழ்பெற்ற திருபு வனத்தில் 1902 ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக துவங்கி அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, கடந்த 121 ஆண்டு களாக இயங்கி வருகிறது.
தற்சமயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 900 பேரும், துவக்கப் பள்ளியில் 450 பேரும் என மொத்தம் 1350 மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர். 500 மாணவ-மாணவிகள் மட்டுமே படிக்க வசதியுள்ள இந்த இடத்தில், 1350 மாணவர்கள் மிகவும் சிரமத்துடன் படித்து வருகின்றனர். திருபுவனம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வுக்கூடம் இல்லை. மேல்நிலை வகுப்பில் ஆங்கில வழி பிரிவிற்கும் இடவசதி இல்லை. போதுமான கழிப்பறை வசதி இல்லாததால் பெண் குழந்தைகள் சிரமப்படுகின்றனர். விளையாட்டு மைதானம் இல்லாததால் மாண வர்களின் விளையாட்டுத் திறன் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் விராலிமலை சதா சிவ மடத்திற்கு எதிரில் 72 ஆயிரம் சதுர அடி இடம் சர்வே எண்.647/20 தமிழக அரசால் கையகப்படுத்தப் பட்டு திருபுவனம் பேரூராட்சி நிர்வாகத்தின் வசம் உள்ளது. தமிழக அரசு இந்த இடத்தின் மீது தர்மபுரம் ஆதீனம் பெற்றுள்ள உயர் நீதிமன்ற தடையை நீக்கி, மேற்படி இடத்தை திருபுவனம் அரசு பள்ளி பயன்பாட்டிற்கு வழங்கிட வேண்டும். திருபுவனம் மேல வீதியில் சர்வே எண்.619/1-ல் அமைந்துள்ள இடத்தில், திருபுவனம் கிளை நூல கத்திற்கு சொந்த கட்டிடம் கட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெற்றது.