புதுக்கோட்டை, டிச.19- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கீரனூரில் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தினை (ஐடிஐ) சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப் பட்டோர் நலத்துறை சிவ.வீ.மெய்ய நாதன், எம்.சின்னதுரை எம்எல்ஏ., ஆகி யோர் வியாழக்கிழமை தொடங்கி வைத்த னர். பின்னர் அமைச்சர் எஸ்.ரகுபதி தெரி விக்கையில், இன்றைய தினம் மாநிலத் தில் ரூ.111 கோடி முதலீட்டில் 10 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் துவக்கப் பட்டுள்ளன. அதனொரு பகுதியாக கீரனூரில், கந்தர்வக்கோட்டை அரசு தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டது. தற்போது, தற்காலிக மாக கீரனூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுகிறது. இதற்கு 465 இலட்சம் கருவிகள், தளவாடங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதி, குளத்தூர் வட்டம், நாஞ்சூர் கிராமத்தில் 3.5 ஏக்கர் அரசு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2024-25 -ஆம் ஆண்டுக்கான பயி ற்சியாளர்கள் சேர்க்கை 31.12.2024 வரை நடைபெறுகிறது. இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில், அட்வாண்ஸ்டு சி.என்.சி. டெக்னீசியன் 2 ஆண்டுகள், சென்ட்ரல் ஏசி பிளாண்ட் மெக்கானிக் 2 ஆண்டுகள், சர்வேயர் 2 ஆண்டுகள், இன்ட்ஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ் டெக்னீ சியன் 1 ஆண்டு ஆகிய 4 நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய தொழிற்பிரிவுகள் தொடங்கப்படுகிறது. இந்த தொழிற் பயிற்சி நிலையத்தில், வருடத்திற்கு 112 மாணவர்கள் சேர்க்கை செய்யப்படு வார்கள். ஆண், பெண் இருபாலரும் தொழிற்பயிற்சி பெற்று வேலை வாய்ப்பும் பெற முடியும் என்றார். அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பேசுகையில், மாவட்டத்தில், புதுக் கோட்டை மற்றும் விராலிமலையில் 2 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்க ளும், 11 தனியார் தொழிற்பயிற்சி நிலை யங்களும் இயங்கி வருகின்றன. 8-ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 10 -ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவி களுக்கு பொருத்துநர், கடைசலர், இயந்திர வேலையாள், கம்மியர் மோட்டார் வண்டி, கம்பியாள், கம்மியர் கருவிகள், வெல்டர், பம்ப் மெக்கானிக், எலக்ட்ரீசியன், சிவில் இன்சினியரிங் அசிஸ்டெண்ட், எம்.ஆர்.ஏசி, கணினி இயக்குபவர், திட்டமிடுதல் உதவியாளர், மேனுபேக்சரிங் ப்ராசஸ் கண்ட்ரோல் மற்றும் ஆட்டோமேசன், அட்வான்ஸ்டு ஊசூஊ மெஷினிங் டெக்னிசியன், மெக்கானிக் எலக்ட்ரிக் வெகிக்கிள், இன்டெஸ்டிரியல் ரோபோடிக்ஸ் மற்றும் மெனுபெக்சரிங் டெக்னிசியன் போன்ற தொழில்பிரிவுகளில் 2024 -ஆம் ஆண்டில் 1,121 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்று வழங்கப்பட்டு வருகிறது. மேலும், அரசு மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்க ளில் 1,050 பயிற்சியாளர்கள் தொழிற்பழ குநராக மாதம் ரூ.8,000 முதல் ரூ.16,000 ஊதியத்துடன் கூடிய பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்றார். எம்.சின்னத்துரை எம்எல்ஏ சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை பேசும்போது, தமிநாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்ட 10 அரசு பயிற்சி நிலை யங்களில் ஒன்றை கந்தர்வகோட்டை தொகுதிக்கு முதலமைச்சர் வழங்கி இருப்பதற்கு தொகுதி மக்களின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை, எளிய குடும்பத்துப் பிள்ளைகள் தொழிற் கல்வி பெறவும், அதன் வேலை வாய்ப்புகளையும் சுய தொழில் தொ டங்குவதற்கும் இந்த தொழிற் பயிற்சி நிலையம் உதவியாக இருக்கும். விரை வில் அனைத்து கட்டமைப்பு வசதிகளு டன் நஞ்சூர் கிராமத்தில் இந்த தொழிற் பயிற்சி நிலையம் அமைய உள்ளதை தொகுதி மக்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லப்பாண்டியன், கோட்டாட்சியர் அ.அக்பர்அலி, ஒன்றிய குழுத் தலைவர் பாண்டிச்செல்வி கே.ஆர்.என்.போஸ், பேரூராட்சித் தலைவர் த.ஜெயமீரா ரவிக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன், அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர்கள் மா.சுந்தர கணபதி (கந்தர்வக்கோட்டை) (பொ), கோ.பாலசுப்ரமணியன் (புதுக்கோட்டை) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.