districts

சிஐடியு-வின் கோரிக்கையை ஏற்று கால்நடை மருத்துவ காப்பீடு வழங்கல்

கும்பகோணம்,  டிச. 31- தஞ்சை மாவட்டம் கும்ப கோணம், பாபநாசம் பகுதி களில் கடந்த கொரோனா தொற்று காலத்தில் கால் நடைகள் மற்றும் கறவை மாடுகள் நோயுற்று நூற்றுக் கணக்கான மாடுகள் இறந்து வந்த நிலையில், விவசாயிகளின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகி பெரிய இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தஞ்சை மாவட்ட கூட்டுறவு சங்கத் தின் (சிஐடியு) சார்பில் கும்ப கோணம் உற்பத்தியாளர் சங்க பாபநாசம் கிளை பால்  உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்வதற்கு கோ ரிக்கை வைக்கப்பட்டது. அதன்பேரில், தஞ்சை மாவட்ட பால் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு ஒன்றி யத்தின் பொது மேலாளர் ரவி  உத்தரவுப்படி, ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 சத வீத மானியத்தில் பாபநாசம் பால் உற்பத்தியாளர்களின் கறவை மாடுகளுக்கு காப்பீடு  செய்யப்பட்டது.  இந்நிகழ்வின் போது ஆவின் பொது மேலாளர் ரவி, கும்பகோணம் பால் கூட்டுறவு சங்க தலைவர் செந்தில், சங்கத்தின் மேலா ளர் சேகர், மேற்பார்வையா ளர் ஆர்.ஜி. ராஜாராமன் ஆகி யோர் உடனிருந்தனர்.