பாபநாசம், ஜூலை 12 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் - சாலியமங்கலம் சாலை அருகே, ரயில்வே நிலையத்தை அடுத்து புது பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு மிகக் குறைவான நகரப் பேருந்துகளே வந்து செல்கின்றன. இதனால் பேருந்து நிலையம் ஆட்டோ, லோடு ஆட்டோ, லாரி, கார், டூ வீலர் நிறுத்தும் நிலையமாகி விட்டது. இந்த புதிய பேருந்து நிலையத்திற்குள், நகரப் பேருந்துகள் வந்து செல்ல வேண்டும். இல்லையென்றால் கட்டண மில்லா ஆட்டோ, லாரி, கார், டூ வீலர் நிலையமாக மாறிவிடும் என்கின்றனர் பாபநாசம் பகுதி சமூக ஆர்வலர்கள். இந்த நிலையத்திலிருந்து, ஒரத்த நாடு, தா.பழூர், ஜெயங்கொண்டம், மன்னார்குடி, சென்னை உள்ளிட்ட ஊர் களுக்கு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். அனைத்துப் பேருந்துகளை யும் இயக்க முடியாவிட்டாலும், குறிப் பிட்ட ஊர் மற்றும் நகரப் பேருந்துகளா வது பாபநாசம் பேருந்து நிலையத் திற்கு வந்து செல்ல வேண்டும். இல்லை யெனில், அருகிலுள்ள திருமண மண்ட பங்களுக்கு வருபவர்கள் கார், வேன் நிறுத்தும் இடமாகத்தான் இந்நிலையம் இருக்கும். பாபநாசத்தில் இயக்கப் படும் மினி பேருந்துகள் புது பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்வ தில்லை. மினி பேருந்துகளும் நிலையத் திற்குள் வந்து செல்ல வேண்டும் என் கின்றனர் அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும்.