districts

img

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்குவதை உறுதிப்படுத்த அறிவுறுத்தல்

புதுக்கோட்டை, மார்ச் 5 - தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்படு வதை உறுதி செய்திட வேண்டும் என புதுக் கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா அறிவுறுத்தி உள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், திருவரங் குளம் வட்டாரம், பூவரசகுடி அங்கன்வாடி மையத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள்  வளர்ச்சிப் பணிகள் துறையின் சார்பில், வள மிகு வட்டார மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தை களுக்கு ஊட்டச்சத்து உருண்டைகளை மாவட்ட ஆட்சியர் மு.அருணா வழங்கினார்.  பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “தாய்மார்கள் அனைவரும் தங்களது குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். தமிழக  அரசு மாதந்தோறும் கண்காணித்து அவர் களுக்கு தேவையான கூடுதல் ஊட்டச் சத்தினை வழங்க இணை உணவுகள் மாதந்தோறும் வழங்கி வருகிறது. குழந்தை களுக்கு உணவில் புரதச் சத்துக்கள் நிறைந்த, முட்டை, கொண்டை கடலை, பாசிப்பயறு, மொச்சை பயறு, தட்டை பயறு,  கோழி இறைச்சி உள்ளிட்ட புரதச் சத்துக்கள் நிறைந்த உணவுகள் குழந்தைகளின் தசை  வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.  வாரத்தில் 2 நாட்கள் கீரையை உணவில் கொடுக்க வேண்டும்.  தற்போது வளமிகு வட்டார மேம்பாட்டு திட்டத்தின்கீழ், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களின் குழந்தைகளுக்கு தினசரி 2 சிவப்பு அரிசி உருண்டை மற்றும்  எள் உருண்டை மாதந்தோறும் 25 நாட்கள்  என்ற வீதத்தில் 6 மாதங்கள் வழங்கப்படு கிறது. எனவே, தாய்மார்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்கப்படுவதை உறுதி  செய்ய வேண்டும்” என்றார்.