பாபநாசம், ஜூன் 11- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த இராஜகிரி ஊராட்சியில் பீர்சா நகர், தைக்கால் தெரு மின் பயன்பாட்டிற்காக ரூ.8,41,371 மதிப்பீட்டில் 100 கே.வி. புதிய மின்மாற்றியை பாபநாசம் சட்டமன்ற உறுப்பினரான ஜவாஹிருல்லா தொடங்கி வைத்தார். முன்னதாக ராஜகிரி தேவரடியார் குளத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை பார்வையிட்டு, பணியை வேகமாகவும், தரமாகவும் முடிக்க அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். இதில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுமதி, கும்பகோணம் மின்வாரிய செயற்பொறியாளர் திருவேங்கடம், உதவி செயற்பொறியாளர் கருணாகரன், பண்டாரவாடை உதவி மின் பொறியாளர் ரஞ்சித் குமார், பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், ராஜகிரி ஊராட்சி மன்றத் தலைவர் சமீமா பர்வீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.