புதுக்கோட்டை/திருவாரூர், மே 27-
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 543 தனியார் பள்ளி வாகனங்கள் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை யில் வெள்ளிக்கிழமையன்று வட்டாரப் போக்குவரத்து அதிகாரி கள் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆலங்குடி என நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் உள்ள தனியார் பள்ளிகளின் 543 வாகனங்கள் மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆய்வுக்கு உட்படுத்தினர்.
திருவாரூர்
திருவாரூர் மாவட்ட ஆயுதபடை மைதானத்தில் பள்ளி வாக னங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு வழிகாட்டு நெறிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளனவா என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் உடனி ருந்தார். சோதனையின் போது முதன்மைக்கல்வி அலுவலர் புகழேந்தி, வட்டார போக்குவரத்து அலுவலர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.