districts

img

தோழர் சரவணன் நினைவு நூலகம் திறப்பு

திருச்சிராப்பள்ளி, பிப்.8- திருச்சி  ஆர்டினஸ் பேக்டரி எம்ப்ளா யீஸ் யூனியன்  முன்னாள் தலைவர் தோழர் சரவணனின் 2-ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சி துப்பாக்கி தொழிற்சாலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.  யூனியன் தலைவர் ஜெயபால் தலைமை வகித்தார். சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா, நூல கத்தை திறந்து வைத்தார். சங்க பொதுச் செயலாளர் சீனிவாசலு, எச்ஏபிபி தொழிற்சங்க தலைவர் இரணியன், சிபிஎம் புறநகர் மாவட்டக் குழு உறுப்  பினர் தெய்வ நீதி ஆகியோர் கலந்து கொண்டனர்.