districts

img

பெருவுடையார் கோயில் தேரோட்டத்தில் ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்பர்

மாவட்ட ஆட்சியர் தகவல்

தஞ்சாவூர், ஏப்.22-  

    தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவு டையார் கோயில் தேரோட்டத்தில் சுமார்  ஒரு லட்சம் பக்தர்களும், பொதுமக்க ளும் பங்கேற்க இருப்பதால், அதற்கு  தேவையான பாதுகாப்பு நடவடிக்கை கள் எடுக்கப்படும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்  ஆலிவர் தெரிவித்தார்.

    தஞ்சாவூரில் பெரிய கோயில் தே ரோட்டம் நடைபெறவுள்ள வீதிகள், தேர்  கட்டுமானம், பாதுகாப்பு முன்னேற்பாடு கள் குறித்து சனிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.  

    பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தஞ்சாவூரில் சிறப்பு மிக்க பெரிய கோயில் தேரோட்டம் மே 1  ஆம் தேதி காலை 6 மணிக்கு நடைபெற வுள்ளது. இதற்காக தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் தற்போது ஆய்வு செய்யப் பட்டுள்ளது.

   தேரோட்டம் நடைபெறும் நான்கு  வீதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள் ளது. சில இடங்களில் சாலையில் பள்ளங்கள் உள்ளதை சரி செய்யவும், மழைநீர் வடிகால் கட்டமைப்பு பகுதி களில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடு களை செய்யவும் அறிவுரை வழங்கப் பட்டுள்ளது.

   தேர் திருவிழாவில் சுமார் 1 லட்சம்  பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால்  அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு முன் னேற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள் ளது. தேரோட்டத்துக்கு வெளியூரி லிருந்து வரும் பக்தர்களுக்கு கூடுதல் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது’’ என தெரிவித்தார்.

   ஆய்வின் போது, தஞ்சாவூர் மாநக ராட்சி ஆணையர் க.சரவணக்குமார், மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, அற நிலையத்துறை உதவி ஆணையர் கவிதா, கூடுதல் காவல் கண்காணிப்பா ளர் ஜெயச்சந்திரன், துணை கண்கா ணிப்பாளர் ராஜா மற்றும் அரசு அலு வலர்கள் பலர் உடனிருந்தனர்.