அரியலூர், ஆக.19- அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் இறந்த வழக்கில் அனுமதியின்றி மின்வேலி அமைத்த இருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி அரியலூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. விக்கிரமங்கலத்தை அடுத்த சாத்தம் பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வேலாயுதம் (95). இவரது மகன் தங்கராசு (60), ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவ லர். இவர்கள் இருவரும் கடந்த 2017 ஆம் ஆண்டு, கொள்ளிடம் ஆற்றுப்படுகையில் உள்ள தங்களது நிலத்துக்குச் சென்றபோது, அதே ஊரைச் சோ்ந்த தேவேந்திரன் (52) தனது வயலில் சோளப்பயிா்களை சேதமாக் கும் காட்டுப் பன்றிகளுக்காக அமைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்தனா். இதுகுறித்து தங்கராசு மகன் தமிழரசன் (33) அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த விக்கிரமங்கலம் காவல்துறையினர், அனு மதியின்றி மின்வேலி அமைத்த தேவேந்தி ரன், அவரது மகன் பிரபாகரன் (25), மின்வேலி அமைக்க உடந்தையாக இருந்த அதே கிரா மத்தைச் சோ்ந்த க.சுரேஷ், ஆ. சுரேஷ் ஆகி யோரைக் கைது செய்தனா். அரியலூர் மாவட்ட கூடுதல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கை விசாரித்த நீதிபதி கா்ணன் தேவேந்திரன் அவ ரது மகன் பிரபாகரன் ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தும், உடந்தை யாக இருந்த இருவரை விடுதலை செய்தும் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா். இதை யடுத்து தேவேந்திரன், பிரபாகரன் ஆகியோர் திருச்சிராப்பள்ளி மத்திய சிறையில் அடைக்கப் பட்டனர்.