districts

img

‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் 8217 குழந்தைகள் பயன்

கரூர், ஆக.12 -

      தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின், தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.  

   அதனடிப்படையில் ‘சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை’ மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மேம்படுத்தும் ஒரு சிறப்பான திட்டமாக இருக்கிறது.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் மூலம், பிறப்பு முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய் மார்கள் மற்றும் வளரிளம் பெண் களுக்கு ஊட்டச்சத்து, ஆரம்ப கால  குழந்தை பராமரிப்பு, கல்வி, ஊட்டச் சத்து மற்றும் சுகாதார கல்வி வழங்கப் பட்டு வருகிறது. மேலும், சுகாதாரத் துறை மூலம் தடுப்பூசி, சுகாதார பரிசோ தனை மற்றும் மருத்துவப் பரிசோதனை களும், பரிந்துரைகளும் வழங்கப்படு கின்றன.

    தமிழ்நாட்டில் ஊட்டச்சத்து குறை பாடு இல்லாத நிலையை அடைந்திட அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிறப்பு முதல் 72  மாதம் வயதுக்குட்பட்ட குழந்தை களின் ஆரோக்கியமான வளர்ச்சியை உறுதி செய்யும் நோக்கில், முதல மைச்சர் 21.5.2022 அன்று ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தினை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத் தில், “ஊட்டச்சத்தை உறுதி செய்” எனும்  திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

   அதனடிப்படையில், கரூர் மாவட்டத் தில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த செறிவூட்டப்பட்ட பிஸ்கட் 15.6. 2023 முதல் வழங்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 2  வயது வரை கடுமையான ஊட்டச்சத்து  குறைபாடுள்ள 954 குழந்தைகள், மித மான ஊட்டச்சத்து குறைபாடுள்ள 1836  குழந்தைகள், இரண்டு வயது முதல் ஆறு வயதுள்ள கடுமையான ஊட்டச் சத்து குறைபாடுள்ள 1313 குழந்தைகள் மற்றும் மிதமான ஊட்டச்சத்து குறை பாடுள்ள 4114 குழந்தைகள் கண்டறியப் பட்டுள்ளனர்.

   இத்திட்டத்தின் மூலம், 6 மாதம் முதல் 2 வயது வரை கடுமையான ஊட்டச் சத்து குறைபாடுகளுடைய குழந்தை களுக்கு மாதத்திற்கு இரண்டு பிஸ்கட்  பாக்கெட்டுகள் என நாளொன்றுக்கு 60  கிராம் வீதம் 4 பிஸ்கட்களும், 2 வயது  முதல் 6 வயதுள்ள கடுமையான ஊட்டச் சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு மாதத்திற்கு ஒரு பிஸ்கட் பாக்கெட் என நாளொன்றுக்கு 30 கிராம் வீதம்  2 பிஸ்கட்களும் வழங்கி குழந்தை களின் எடை, உயரம் மற்றும் உடல்நலம் கண்காணிக்கப்படுகிறது.  

   இதில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ளதாக கண்டறியப்பட்ட 896 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படுகிறது. மிதமான ஊட்டச்சத்து குறைபாடுள்ளதாக கண்ட றியப்பட்டுள்ள 7430 குழந்தைகளுக்கு சத்துமாவு உள்ளிட்ட சத்தான உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. “ஊட்டச் சத்தை உறுதி செய்” திட்டத்தில் மொத்தம் 8217 குழந்தைகள் பயன டைந்து வருகின்றனர்.

   எதிர்கால சந்ததியினர்களான குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டினை தவிர்த்திடும் பொருட்டு, ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டத் தினை செயல்படுத்தி பிற மாநிலங்க ளுக்கு முன்னுதாரணமாக தமிழ்நாடு அரசு திகழ்ந்து வருகிறது. இத்திட்டம் வருங்கால சந்ததியினரையும் பாது காத்து, வாழ்வில் முன்னேற்றம் அடைய  வழிவகை செய்துள்ளது என்றால் அது  மிகையாகாது. செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,  கரூர் மாவட்டம்