பெரம்பலூர், ஜூலை 1 -
1.7.2023 முதல் 5.7.2023 வரை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் விளையாட்டு மைதானத்தில் இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.
முதற்கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடற்தகுதி பரிசோதனை மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி களை ஆட்சியர் க.கற்பகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்விற்கு உதவி ராணுவ ஜெனரல் அதிகாரி எம்.எஸ்.பாகி மற்றும் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் சியாமளாதேவி முன்னிலை வகித்தனர்.
உடற்தகுதி தேர்விற்காக நடத்தப்பட்ட பயிற்சியினை பார்வையிட்ட பின்னர் ராணுவ அதிகாரிகள் கூறுகையில், 1.7.2023 முதல் 5.7.2023 வரை 16 மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு இந்த முகாம் நடைபெறவுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மயி லாடுதுறை மற்றும் காரைக்கால் ஆகிய 16 மாவட்டங் களைச் சேர்ந்தவர்களுக்காக மட்டுமே இம்முகாம் நடத்தப்படு கிறது. புதியவர்களுக்கு அல்ல. எனவே முகாம் நடை பெறும் நாட்களில் புதியவர்கள் வர தேவையில்லை என்ற னர்.
திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு பணி அலுவலர் கர்னல் தீபாகுமார், மருத்துவ அலுவலர் முதித்துப் ரெட்டி, மேஜர் நீலம்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, வருவாய் கோட்டாட்சியர் ச.நிறை மதி மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.