புதுக்கோட்டை, மே 20-
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி காயத்ரி 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 481 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள் ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10-ஆம் வகுப்பு மாணவி காயத்ரி. இவரது தாத்தா ஆர். வெள்ளைச்சாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பி னராகவும், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலத் தலைவர்களில் ஒருவராக வும் பணியாற்றியவர். இவரது தந்தை கட்சியின் தற்போதைய அரிமளம் ஒன்றியச் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.
மாணவி காயத்ரி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்-98, ஆங்கிலம்-97, கணிதம்-91, அறிவியல்-96, சமூக அறி வியல் 99 என மொத்தம் 481 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பிடித்துள்ளார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னதுரை எம்எல்ஏ., மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் உள்ளிட் டோர் தொலைபேசி மூலமாக மாணவி காயத்ரியை பாராட்டினர்.