districts

img

மாற்றுத்திறனாளிகள் நலன் காக்கும் தமிழ்நாடு அரசு

தஞ்சாவூர், டிச.15 - “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்” என்ற பேரறிஞர் அண்ணாவின்  தத்துவப்படி, ஏழை, எளியோர் நலன் காத்திட ஏராளமான நலத்திட்டங்களை தமிழ்நாடு முத லமைச்சர் சிறப்பாக செயல்படுத்தி இந்தியா விற்கே முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு சிறந்தோங்கும் வகையில் வழி நடத்தி வரு கிறார். தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 33,410 நபர்களுக்கு தேசிய அடை யாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதில் 33,027 பயனாளிகளுக்கு (98 சதவீதம்) தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. 8,708 நபர்களுக்கு மாதம் ரூ.2,000 வீதம் 12 மாதத்திற்கு ரூ.20 கோடியே 89 லட்சத்து 92 ஆயிரம் பயனாளி களின் வங்கி கணக்கிற்கு இசிஎஸ் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது என மாவட்ட  ஆட்சியர் தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தில் “நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் 48  பேருக்கு கும்பகோணம் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழா வில் விலையில்லா வீட்டு மனைப் பட்டாவை மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், கும்ப கோணம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்ப ழகன் ஆகியோர் வழங்கினர். கும்பகோணம் வட்டம் சேசம்பாடி ஊராட்சி யில் கும்பகோணம் வட்டத்தைச் சேர்ந்த 48 மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியரிடம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். கும்பகோணம் காமராசர் சாலையில் வசிக்கும் க.சந்திரா தெரிவிக்கையில், நான் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறேன். எனது குறைந்த வருமானத்தில் வீட்டு வாடகை மாதம் ரூ.2,000 செலுத்தி வரு கிறேன். தற்போது எனக்கு சொந்த வீடு கட்டிக்  கொள்ள வீட்டுமனை இலவசமாக தந்த தமிழ் நாடு முதலமைச்சருக்கு நன்றி” என்றார். கும்பகோணம் படையாட்சி தெருவில் உள்ள உமா சிவகுருசாமி தெரிவிக்கையில், “என்னால் வேலை எதுவும் பார்க்க இயலாத  நிலையில் உள்ளேன். நான் வசிக்கும் வீட்டின்  வாடகையை கொடுக்க முடியாமல் மிகவும் கஷ்டப்பட்டேன். தற்போது விலையில்லாமல் எங்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கி குடி யிருப்பதற்கு வழிவகை செய்த முதலமைச்ச ருக்கு நன்றி” என்றார். இவ்வாறு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழக அரசு பல்வேறு நலத் திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. தொகுப்பு: ரெ.மதியழகன்,எம்.காம்., பி.எல்., செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர் மாவட்டம்.