districts

img

ஒன்றிய அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூலை 26- மத்திய பட்ஜெட்டில் ஊழியர்களுக்கு எதிரான அணுகுமுறைக்கும் மக்கள் விரோத கொள்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதி ராகவும் அரசு ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு வட்டத் தலைவர் பரமேஸ்வரி தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் தம்பிதுரை, வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் விஜய் ஆனந்த், மருந்தாளுநர் சங்க மாவட்ட துணைத் தலைவர் தியாகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் எஸ்.செங்குட்டுவன் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினார். திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எஸ்.செங்குட்டுவன் கோரிக்கையை வலியுறுத்தி உரை யாற்றினார். வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் வட்ட தலைவர் நடரா ஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற் குழு உறுப்பினர் தனபால், மாவட்ட இணைச் செயலாளர் டி.ராஜசேகரன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். இதேபோல் கூத்தாநல்லூர், நீடா மங்கலம், மன்னார்குடி, முத்துப்பேட்டை, நன்னிலம் வட்டக் கிளைகளிலும் போராட்டம் நடைபெற்றது. திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி 1 வட்டக் கிளை சார்பில் புதனன்று வட்டக் கிளை தலைவர்  சுரேஷ் பிரபு தலைமையில், இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அரசு தொழிற்பயிற்சி ஊழியர் சங்கத்தின்  மாநிலச் செயலாளர் நவநீதன், மாவட்டத் தலைவர் பால்பாண்டி ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருச்சிராப்பள்ளி 2 வது வட்டக்கிளை சார்பில்  மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  வட்டக் கிளை நிர்வாகி கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாநில துணைத் தலைவர்  பெரியசாமி கண்டன உரையாற்றினார். திருச்சிராப்பள்ளி 2 வது வட்டக் கிளை சார்பில்  மன்னார்புரம் பல்துறை கட்டட வளாகத்தில் மாவட்ட இணைச் செயலாளர் அமுதவல்லி தலைமையிலும், மணப் பாறை வட்டக்கிளை சார்பில் வட்டக் கிளைச் செயலாளர் சுந்தர்ராஜன் தலை மையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மாவட்ட இணைச் செயலாளர் அல் போன்ஸ் கண்டன உரையாற்றினார். திருவெறும்பூர் வட்டக்கிளை சார்பில்  வட்டக் கிளை தலைவர் சந்திரா தலை மையிலும், முசிறி வட்டக்கிளை சார்பில்  தா.பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவல கத்தில் வட்டக்கிளை செயலாளர் அமுதா  தலைமையிலும், தொட்டியம் வட்டக்கிளை  சார்பில் வட்டக்கிளை துணைத் தலைவர்  ஜெயக்கொடி தலைமையிலும் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.  தஞ்சாவூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தஞ்சை வடக்கு வட்டம் சார்பில் தஞ்சை  தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அஜய் ராஜ் கோரிக்கைகளை விளக்கிப்  பேசினார். வட்டச் செயலாளர் கோவிந்த ராஜ், வட்டப் பொருளாளர் வினோத் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். அரசு ஊழி யர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோ தண்டபாணி பேசினார்.  திருவிடைமருதூர் தாலுகா வட்டாட்சி யர் அலுவலகத்தில் வட்டத் தலைவர்  கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தை  விளக்கி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில அமைப்பு செயலாளர் விஸ்வேஸ்வரன், கும்ப கோணம் வட்டத் தலைவர் வெங்கடேசன், வட்டச் செயலாளர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினர்.