districts

விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி

புதுக்கோட்டை, ஜூன் 27-  

    புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் உயிரிழந்த வரின் குடும்பத்துக்கு நீதிமன்ற உத்தரவின்படி இழப்பீடு  வழங்காததை அடுத்து, செவ்வாய்க்கிழமை புதிய பேருந்து  நிலையத்தில் நின்ற அரசுப் பேருந்தை நீதிமன்றப் பணியா ளர்கள் ஜப்தி செய்தனர்.

  புதுக்கோட்டை மாவட்டம் செங்களாக்குடியைச் சேர்ந்த சரவணன் (42) என்பவர், கடந்த 2021இல் பால்  விநியோகம் செய்வதற்காக இரு சக்கர வாகனத்தில் திருச்சிராப்பள்ளி நோக்கிச் சென்றபோது, மணம்பட்டி யில் இருந்து வந்த அரசு நகர்ப் பேருந்து மோதியது.

   இதில் பலத்த காயமடைந்த சரவணன், திருச்சி ராப்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து வழக்கில், உயிரிழந்த சரவணன் குடும்பத்துக்கு ரூ. 27.68 லட்சம் இழப்பீடு வழக்க வேண்டும் என அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.

   இழப்பீடு வழங்கப்படாததைத் தொடர்ந்து, அரசுப் பேருந்தை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலை யத்துக்கு வந்த நீதிமன்றப் பணியாளர்கள், இலுப்பூர் நகர்ப்  பேருந்து ஒன்றை ஜப்தி செய்து நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றனர்.