திருச்சிராப்பள்ளி, டிச.17- தமிழ்நாடு மின் வாரியத்தில் பணிபுரியும் 10 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை கண்டித்தும், மின்வாரியத்தில் 9 மாவட்டங்களில் ஏராள மான காலிப் பணியிடங்கள் இருந்தும் கேங் மேன்களை அங்கு பணி அமர்த்தாமல் 300 கிலோமீட்டர் தாண்டி பணி அமர்த்துவதை கைவிட வேண்டும். மின்னோட்டம் உள்ள இடங்களில் பணி செய்ய விடமாட்டோம் என்று நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறக் கூடாது. பணி நேரத்தில் விபத்து ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை பெற முழு மருத்துவ செலவையும் வாரியமே ஏற்க வேண்டும். இறந்த கேங்மேன் பணியாளர்களுக்கு உரிய இழப்பீடு தொகையையும், வாரிசு வேலையும் வழங்க வேண்டும். இரண்டு வருட பயிற்சி காலம் என்பதை 6 மாதங்களாக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு திருச்சி பெருநகர் வட்டம் சார்பில் வியாழனன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட இணை செய லாளர் நடராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், வட்ட பொருளாளர் இருதயராஜ், வட்ட செயலாளர் செல்வராஜ் ஆகியோர் பேசினர்.