திருச்சிராப்பள்ளி, செப்.1 - தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் கும்ப கோணம் கோட்டத்தின் சார்பில் திருச்சி மண்டலத் தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அரசு கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவி யர்களுக்கு இலவச பேருந்து பயண அட்டைகள் செப்.1 முதல் வழங்கப்பட்டு வரு கின்றன கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்கு நர் மோகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப் பில், “தமிழ்நாடு அரசு போக் குவரத்துக் கழகம் கும்ப கோணம் கோட்டம், திருச்சி மண்டலத்திற்கு இலவச பேருந்து பயண அட்டை வேண்டி 2,14,000 விண்ணப் பங்கள் வரப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், வரப் பட்ட விண்ணப்பங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகம் சார்பில் ஸ்மார்ட் கார்டு முறையில் இலவச பேருந்து பயண அட்டை தயார் செய்யப் பட்டு, செப்.1 முதல் வழங்கப் படுகின்றன. இதுவரை திருச்சி மண்ட லத்தில் திருச்சி, அரிய லூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பயிலும் மாணவ, மாணவி யர்களுக்கு இலவச பயண அட்டை (ஸ்மார்ட் கார்டு) அந்தந்த பள்ளி மற்றும் கல்லூரிகளில் வழங்கப்படு கின்றன. அதன்படி, வெள்ளிக் கிழமை திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பெண் கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 2478 மாணவி களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்கப் பட்டுள்ளது” என தெரிவித் துள்ளார்.