districts

img

இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கிட,,நான்கு பொதுத்துறை

இன்சூரன்ஸ் பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்கிட,,நான்கு பொதுத்துறை பொதுஇன்சூரன்ஸ் நிறுவங்களை ஒன்றிணைத்திட .ஆயுள் இன்சூரன்ஸ் சேமிப்புகளுக்கு சிறப்பு வரி விலக்கு அளித்திட வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்குமாறு கேட்டு திமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாண சுந்தரத்திடம் கும்பகோணம் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க பொறுப்பாளர்கள் நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். காப்பீட்டுக்கழக ஊழியர் சங்க இணை செயலாளர் சேகர், துணைத் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். இது குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்கும், நிதியமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்வதாக மாநிலங்களவை உறுப்பினர் எஸ். கல்யாணசுந்தரம் உறுதியளித்தார்.