தஞ்சாவூர், ஜூலை 12 - வீட்டிலிருந்த குழந்தையை குரங்கு கடித்ததால், காயமடைந்த குழந்தையின் பெற்றோரிடம் வனத்துறை சார்பில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே பாளாம்புத்தூர்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ். இவரது மனைவி இசை வாணி. இவர்களுக்கு தூரிகா என்ற பிறந்து ஒரு மாதமே ஆன பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூலை 4 அன்று, குழந்தையை வீட்டில் தரையில் உறங்க வைத்துவிட்டு, இசைவாணி சமையல் வேலையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு குரங்கு குழந்தையின் தலை யில் கடித்துள்ளது. குழந்தை அழத் தொடங் கியதும், இசைவாணி மற்றும் உறவினர்கள் குரங்கை விரட்டினர். குரங்கு கடித்ததால் குழந்தையின் தலை யில் காயம் ஏற்பட்டது. உடனே தஞ்சாவூர் இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சா வூர் மாவட்ட வன அலுவலர் அகில்தம்பி உத்தரவின்படி, பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்ட வனத்துறையினர் உடனடியாக, பாளாம் புத்தூர் பகுதியில் கூண்டு வைத்து அந்த பகுதியில் சுற்றித் திரிந்த ஆண் குரங்கை பிடித்து புதுக்கோட்டை மாவட்ட காப்புக் காட்டுப் பகுதியில் விட்டனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தையை பார்வையிட்டு மருத்துவ சிகிச்சை குறித்து மருத்துவர்களி டம் கேட்டறிந்தனர். மேலும், குரங்கு கடித்தால் அதற்கான இழப்பீடுத் தொகையை தமிழக அரசு வழங்குவது குறித்து, மாவட்ட வன அலு வலர் அகில்தம்பி தமிழக அரசிடம் அதற்கான அனுமதியை பெற்றார். தொடர்ந்து வியாழக்கிழமை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன், வனவர் ஏ.சிவசங்கர், வனக்காப்பாளர் எம்.கலைச் செல்வன், வனக்காவலர் எம்.ராஜேந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர், ஊராட்சி மன்றத் தலைவர் வேலாயுதம் ஆகியோர் குழந்தையை பார்வையிட்டு பெற்றோரிடம் நலம் விசாரித்தனர். பின்னர் குழந்தையின் பெற்றோரிடம் தமிழக அரசின் சார்பில், ரூ.59,100-க்கான இழப்பீடு காசோலையை வழங்கினர்.