திருச்சிராப்பள்ளி, ஜன.10- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகு திக்குட்பட்ட நாகமங்கலம் - ஆலம்பட்டி பிரிவு சாலை பகுதியில் உள்ள நியூ எம்ஜிஆர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில், வீடு இல்லாத ஏழை - எளிய மக்களுக்கு, குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் 512 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடியமர்த்தப்பட்டனர். ஆனால் இவர்களுக்கான அடிப்படை வசதிகளை, எந்த துறை மூலம் செய்து தரு வது என்பதில் தற்போது போட்டி நிலவு கிறது. குறிப்பாக இந்த பகுதி நாகமங்கலம் ஊராட்சிக்குட்பட்டதாக இருந்தும், உரிய அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் குடிசை மாற்று வாரியத்திடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்நிலையில், குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் சாக்கடை நீர் வெளியே செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தேங்கி கிடக்கும் குப்பைகள், நிரம்பி வழி யும் செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்ய வேண்டும். குடிநீர் வசதி செய்து தர வேண்டும். குழந்தைகளுக்கான பால்வாடி, ரேசன் கடை, சமுதாயக் கூடம், விளை யாட்டு மைதானம் அமைத்து தர வேண் டும். புதர் மண்டி கிடக்கும் பூங்காவை சுத் தப்படுத்தி தர வேண்டும். இங்குள்ள 512 வீடுகளையும் நாகமங்கலம் பஞ்சாயத்தில் இணைக்க வேண்டும். சுடுகாடு அமைத்துத் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திங்களன்று மணி கண்டம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு சிபிஎம் நாகமங்க லம் ஒன்றிய குழு உறுப்பினர் வடிவேல் தலைமை வகித்தார். உண்ணாவிரதத்தை மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் துவக்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வெற்றிச்செல்வன், கார்த்திகேயன். மாவட்டக் குழு உறுப்பினர் சங்கர், ஒன்றிய செயலாளர் தங்கராஜ், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி ஆகியோர் பேசினர். உண்ணாவிரதத்தை நிறைவு செய்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா பேசினார்.