கும்பகோணம், ஜூன் 14-
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ் நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் 7-ஆவது வட்டப் பேரவை வட்டத் தலைவர் துரைராஜ் தலைமையில் நடைபெற் றது.
பேரவையில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராஜ கோபாலன், சங்க கொடி யேற்றி, நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் வட்ட துணைத் தலைவர் கலைச்செல்வி, வட்டத் துணைத் தலைவர் சண் முகம், தொழிற்சங்க கூட்ட மைப்பு கண்ணன், வட்ட இணைச் செயலாளர் சாரங் கன், மாவட்டத் தலைவர் கலியமூர்த்தி, மாவட்டச் செயலாளர் தமிழ் மணி, மாவட்ட துணைத் தலை வர் அன்புமணி, மாவட்ட இணைச் செயலாளர் வெங்க டேசன், பிஎஸ்என்எல் ஓய்வூ தியர் சங்கம் பொறுப்பாளர் ராமமூர்த்தி, அரசு ஊழியர் சங்க வட்டத் தலைவர் வெங் கடேசன், சத்துணவு ஊழியர் சங்க நகரத் தலைவர் கவிதா, ஆகியோர் வாழ்த்திப் பேசினர்
மாநில பொதுச் செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, சிறப்பு ரையாற்றினார். வட்ட இணை செயலாளர் கண்ணாமணி நன்றி கூறினார். ஓய்வூதியர் சங்க நிர்வாகிகள், பொறுப் பாளர்கள் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்ட னர்.
பேரவையில், ஓய்வூதி யர்கள் மற்றும் குடும்ப ஓய்வூ தியர்கள் அனைவருக்கும் பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரம் தமிழக அரசு வழங்க வேண்டும். தமிழக முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கொள்கை முடிவில் ஏற்றுக் கொண்ட படி ஓய்வூதியர் 70 வயது முடிந்தவுடன் 10 விழுக்காடு கூடுதல் ஓய்வூதி யம் வழங்கிட உடனடியாக அரசாணை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்பன உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.