புதுக்கோட்டை, ஆக.4-
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு புத்தகங் களைப் பரிசாக வழங்கி உற்சாகப் படுத்தி வருகின்றனர் புத்தக நன்கொடையாளர்கள்.
புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாசகர்கள், பொதுமக்கள் மற்றும் ஆயிரக் கணக்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரு கின்றனர். இதற்காக வாகனம் உள்ளிட்ட ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்துள் ளது. பள்ளி மாணவர்கள் ஆயிரக்கணக்கில் வந்தாலும் அவர்கள் அனைவரும் புத்தகம் வாங்குவதில்லை.
குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் இருந்து அழைத்து வரப்படும் மாணவர்களிடம் பெரும் பாலும் புத்தகம் வாங்கும் அளவுக்கு பணம் இருப்பதில்லை. இதனையறிந்த சில புத்தக ஆர்வலர்கள் அரசுப் பள்ளி மாண வர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கி உற்சாகப்படுத்தி வருகின்றனர்.
இதனொரு பகுதியாக வெள்ளிக்கிழமை வந்த அரையப்பட்டி அரசுப் பள்ளி மாண வர்களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார், வாசகர் பேரவைத் தலைவர் பேரா.விஸ்வநாதன், அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் மு.முத்துக்குமார், புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ்.இளங்கோ ஆகியோர் 65 மாணவர்களுக்கு சுமார் 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்களை வழங்கிச் சிறப்பித்தனர். இது அம்மாணவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.