districts

பசுந்தீவன உற்பத்திக்கு ஏக்கருக்கு ரூ.3000 மானியம்

கரூர், ஜூன் 5-

     கரூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனப் பற்றாக்  குறையை போக்கவும், பசுந்தீவன உற்பத்தியை பெருக்க வும் தீவன அபிவிருத்தி திட்டங்களை  இவ்வாண்டு கால்நடை பராமரிப்புத் துறை  செயல்படுத்திட உள்ளது.

    40 ஏக்கரில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் பொருட்டு, நீர்ப்பாசன வசதி கொண்ட மர/ பழத்தோட்டத் தில் 0.5 ஏக்கர் முதல் 1.0 ஹெக்டேர் பரப்பளவில் பல்லாண்டு தீவன பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு குறைந்த பட்சம் 3 வருட காலம் வரை பராமரிக்க ஒரு ஏக்கருக்கு  ரூ.3000 ஒரு ஹெக்டேருக்கு ரூ.7500 மானியமாக வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  

    மேலும் இத்திட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் மற்றும்  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி பிரிவினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். இந்த திட்டத்திற்கான மொத்த  பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட் டோர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.

   எனவே தகுதிவாய்ந்த நபர்கள் ஜூன் 10-ஆம் தேதிக் குள் தங்கள் கிராமத்திற்குட்பட்ட கால்நடை மருந்தக  கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங் களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பங்கள் அளித்து  பயன்பெறலாம்.