கரூர், மே 19-
கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் ‘‘நான் முதல்வன்’’ திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளாகிய ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணை யம் (SSC), ரயில்வே தேர்வு குழுமம் (RRB), வங்கி பணியாளர் தேர்வு குழுமம் (IBPS) உள்ளிட்ட தேர்வுகளை எதிர்கொள்ள இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளன.
பயிற்சி வகுப்புகள் மே 25 முதல் துவங்கப்படவுள்ளன. 100 நாள் பயிற்சி 300 மணி நேரம் வகுப்பு 120 பயிற்சி தேர்வுகள் 300 மணி நேரம் வழிகாட்டுதல்கள் வகுப்பு பயிற்சி புத்தகங்கள் மற்றும் கையேடுகள் வழங்கப்படும். எனவே, அரசு பணிக்கு தயாராகி வரும் கரூர் மாவட்ட வேலை தேடும்இளைஞர்கள் https://candidate.tnskill.tn.gov. in/CE-NM/TNSDC_REGISTRATION.ASPX என்ற இணையதளத் தில் 20.05.2023 க்குள் தங்களின் விவரங்கள் முன்பதிவு செய்து பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடையுமாறு கரூர் மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.