இராமநாதபுரம், ஜூன் 28-
இராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அடுத்துள்ள நாம்புதாளை மீனவ கிராமத்தை சேர்ந்தவர்கள் பிரகதீஸ்வரன் (22), ஜீவா(21), வசந்த் (23). இந்தமூன்று மீன வர்கள் துபாய் நாட்டிற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒப்பந்த அடிப்படையில் மீன்பிடிக்கச் சென்றனர்.
இந்நிலையில், துபாய்அஜ்மான் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க 11 மீனவர்கள் சென்றுள்ளனர்.கடந்த 19 ஆம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டி ருக்கும் போது ஈரான் கடற்படையினர் அந்த படகு மற்றும் படகில் இருந்த 11 மீனவர்களை சிறைப்பிடித்து கொண்டு சென்றனர். இந்த தகவலை அவரது குடும்பத்தினரிடம் தெரி வித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, ஈரான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டமூன்று மீனவர்களை மீட்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி அவர்களது குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.