districts

img

பெண்கள் மீதான வன்முறைகளை தடுக்க வலியுறுத்தல்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 11- அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவெறும்பூர் ஒன்றியக் குழு  சார்பில் சர்வதேச பெண்கள் தின கருத்த ரங்கம் சங்க அலுவலகத்தில் நடந்தது.  கருத்தரங்கிற்கு ஒன்றியத் தலைவர்  யமுனாதேவி தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர் நித்யா வரவேற்றார்.  மாநிலச் செயலாளர் ராணி, புறநகர் மாவட்டச் செயலாளர் கோமதி, ஒன்றியச் செயலாளர் மல்லிகா ஆகியோர் பேசினர்.  பெண்கள், பெண் குழந்தைகள் மீதான  வன்முறைகளை தடுக்க வேண்டும். பெண் களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசின்  வேலைவாய்ப்புகளில் திருநர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தேசிய  ஊரக வேலை திட்டத்தின்கீழ் வழங்கப்படும்  நூறு நாள் வேலையை 150 நாளாகவும், கூலியை ரூ.600 ஆகவும் உயர்த்தி வழங்க  வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணைச் செயலாளர் கிரிஜா மேரி நன்றி கூறினார்.  கும்பகோணம்-மாற்றுத்திறனாளிகள் சங்கம் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மகேஸ்வரி தலைமை வகித்தார். நித்தியானந்தம் வரவேற்றார். மாதர் சங்க மாவட்டத் தலைவர் கலைச் செல்வி துவக்கவுரை ஆற்றினார். தொழிற் சங்க முன்னாள் தலைவர் ஆர்.மனோ கரன் நிறைவுரையாற்றினார். மாற்றுத்திற னாளிகள் சங்க பொறுப்பாளர் பாரூக் நன்றி தெரிவித்தார். கரூர் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கரூர் மாவட்டக் குழு சார்பில் மகளிர் தின‌  விழா கரூர் ஈரோ கிட்ஸ் பள்ளியில் கொண் டாடப்பட்டது. விழாவிற்கு அறிவியல் இயக்க கரூர் மாவட்டத் தலைவர் பாஸ் கரன் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் ஐ.ஜான் பாஷா, ஈரோ கிட்ஸ் தலை வர் மீனா சுப்பையா ஆகியோர் பேசினர்.  “மகளிரும் மருத்துவமும்” என்ற தலைப் பில் டாக்டர் பி.ஆர் தீபா சிறப்புரையாற்றி னார். மாவட்ட துணைத் தலைவர் என்.சாகுல்அமீது, மாவட்ட பொருளாளர் தமிழரசி,  ஆசிரியர்கள் ஜெயமணி, வானவில் மன்ற  உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.