திருச்சிராப்பள்ளி, ஜூலை 18- திருச்சி புறநகர் மாவட் டம் துறையூர் நகரில் சாலை யோர சிறு வியாபாரிகளின் பிரதிநிதிகள் தேர்தல் அறி விக்கப்பட்டது. அதில் சிஐடியு சங்கத்தின் சார்பில் எம்.சங்கிலிதுரை, எம்.ஆனந்தன், முகமது அலி, ஆர். ரவி, தனலட்சுமி, செல்வராஜ் ஆகியோர் போட்டியிட்டனர். மற்றொரு தரப்பில் அமமுக சார்பில் பீரங்கி சுப்பிரமணி என்பவர் போட்டியிட்டார். அவர் வேட்புமனு தள்ளுபடி செய் யப்பட்டது. இதையடுத்து சிஐடியுவினர் அனைவரும் போட்டியின்றி தேர்வு செய் யப்பட்டனர்.