திருச்சிராப்பள்ளி, ஜூன் 21 - ராணுவத்தை இந்துத்து வாமயமாக்கி ஆர்எஸ்எஸ் திட்டத்தை அமலாக்கும் வகையில் கொண்டு வரப் படும் அக்னி பாதை திட்டத்தை எதிர்த்தும், அதை கைவிடக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் சார்பில் சிந்தா மணி அண்ணாசிலை அரு கில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பகுதி செய லாளர் ராமர் தலைமை வகித் தார். மாநிலக் குழு உறுப்பி னர் ஸ்ரீதர், மாநகர் மாவட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருவெறும்பூர் தாலுகா குழு சார்பில் திருவெறும்பூர் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் மல்லிகா தலைமை வகித்தார். மாவட் டச் செயலாளர் ஜெய சீலன், மாவட்ட செயற் குழு உறுப்பினர் சிவராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் முருகேசன், தெய்வ நீதி ஆகியோர் கண்டன உரை யாற்றினார்.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நகரச் செயலாளர் ஆர்.சோலையப்பன் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மூத்த தோழர் எம். ஜியாவுதீன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஏ.ஸ்ரீதர், ஜி.நாகராஜன், துரை.நாரா யணன், எஸ்.ஜனார்த்த னன், மாவட்டக் குழு உறுப் பினர்கள் சி.மாரிக்கண்ணு, டி.காயத்ரி உள்ளிட்டோர் பேசினர்.