districts

குழந்தைகளுடன் பெட்ரோல் குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண்

புதுக்கோட்டை, ஆக 10 -

      புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரண்டு குழந்தையுடன் பெட்ரோல் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது:

      புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான்மலையைச் சேர்ந்த வர் பெருமாள். இவருடைய மனைவி செல்வி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. தனது கணவர், கணவரின் சகோதரர் மற்றும் கணவனின் தந்தை தன்னை அடித்துத் துன்புறுத்துவதாக கூறி மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க வியாழக்கிழமை தனது குழந்தைகளுடன் செல்வி சென்றுள்ளார்.  

    இதனையடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் அவரை அரசு அலுவலர்கள் அமர வைத்துள்ளனர். சிறிது நேரத்தில் தனது  கைப்பையில் வைத்து எடுத்து வந்த பாட்டிலில் வைத்திருந்த பெட்ரோலை செல்வி குடித்ததோடு தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

    இதனைப் பார்த்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து திருகோகர்ணம் காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகின்றனர்.