திருவாரூர், செப்.21 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் திரை இயக்கம் சார்பாக நடைபெறும் உலக திரைப்பட விழாவில், சனிக்கிழமை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டன் பங்கேற்று திரை யிடல் குறித்து பேசினார். ‘ரயில்’ திரைப்பட இயக்குநர் சக்தி பாஸ்கர், துணை காவல் கண்காணிப்பாளர் மணிகண்டனுக்கு சால்வை அணி வித்தார். திரைப்பட பேராசிரியர் சிவக்குமார் நினைவு கேடயம் வழங்கினார். அமைப்பின் வரவேற்பு குழு தலைவர் ஐ.வி.நாகராஜன் கலந்து கொண்டனர்.