districts

img

கூட்டுறவு வார விழாவில் கடனுதவி வழங்கல்

தஞ்சாவூர்/திருத்துறைப்பூண்டி, நவ.20 - தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற 71 ஆவது கூட்டுறவு வார விழாவில் 2,806 பேருக்கு, ரூ. 22.88 கோடி கடனு தவியை உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.  செழியன் வழங்கினார். தொடர்ந்து, அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி  பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றி தழ்கள், பரிசுகள், சிறந்த கூட்டுறவு நிறு வனங்களுக்கு கேடயங்கள் ஆகியவற்றையும் அமைச்சர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பி னர் எஸ். கல்யாணசுந்தரம், மக்களவை உறுப்பினர்கள் ச. முரசொலி (தஞ்சாவூர்), ஆர்.  சுதா (மயிலாடுதுறை), திருவையாறு தொகுதி  சட்டப்பேரவை உறுப்பினர் துரை.சந்திரசேக ரன், மேயர்கள் சண். இராமநாதன் (தஞ்சாவூர்), க. சரவணன் (கும்பகோணம்)உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருத்துறைப்பூண்டி திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டம், எடையூரில் நடைபெற்ற 71 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு 3553 பய னாளிகளுக்கு ரூ.24 கோடியே 34 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு, திருவாரூர் மாவட்ட ஆட்சி யர் தி.சாருஸ்ரீ, தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலை வாணன், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவர் கோ.பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.