தஞ்சாவூர், ஆக.4 -
தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்றவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.
இதுவரை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்காக சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு, 3 கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. ஆக.8 அன்று (செவ்வாய்க்கிழமை) தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலகத்திலும், ஆக.18 அன்று (வெள்ளிக்கிழமை) கும்பகோணம் பேருந்து நிலையம் அருகில் கே.எம்.எம்.எஸ் வளாகத்திலும், ஆக.22 அன்று (செவ் வாய்க்கிழமை) பட்டுக்கோட்டை வட்டாட்சி யர் அலுவலகம் எதிரில் உள்ள கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெற உள்ளது.
இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்து வர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளிகளை பரிசோ தனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளனர்.
மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திற னாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப் படவுள்ளது.
இந்த சிறப்பு முகாம்களில் இதுவரை, மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் உரிய ஆவணங்களுடன் நேரில் வந்து கலந்து கொண்டு, மாற்றுத் திறனாளி களுக்கான அடையாள அட்டை பெற்று பயன் பெறுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.