உதகை, டிச.13- மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ஜேஎல்சி திட்டத்தில் கடன் பெற, கையூட்டு வாங்குவதாக எழுந்த புகாரையடுத்து, மார்க் சிஸ்ட் கட்சியின் தலையீட்டால் தடுத்து நிறுத் தப்பட்டது. நீலகிரி மாவட்டம், பந்தலூர் தாலுகா பகு திகளுக்குட்பட்ட கிராமங்களில் பந்தலூர் இந் தியன் வங்கி மகளிர் சுய உதவிக் குழுக்க ளுக்கு கூட்டுப் பொறுப்புக்குழு (Joint Liability Group - JLG) திட்டத்தின் மூலம் குழு கடன்கள் வழங்கி வருகின்றது. இந்த கடன் களை வங்கிகள் அறக்கட்டளைகள் மூலம் வழங்கி வருகிறது. ஆனால், பந்தலூர் இந்தி யன் வங்கி மூலம் வழங்கக்கூடிய இந்த கடன் களை பெற்று தரக்கூடிய அறக்கட்டளை மற்றும் அதன் ஒரு சில நிர்வாகிகள் பொது மக்களிடமிருந்து கடன் பெற்று தருவதற்காக முன்பனமாக ரூ.3500 இல் இருந்து 5 ஆயி ரம் ரூபாய் வரை கையூட்டு பெறுவதாக புகார் எழுந்ததது. இதனையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் பந்தலூர் ஏரியாக் கமிட்டியின் செயலாளர் ரமேஷ் தலைமையில், வெள்ளியன்று பந்த லூர் வங்கி மேலாளரிடம் இதுகுறித்த புகாரை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து நடை பெற்ற பேச்சுவார்த்தையில், இனி வரும் காலங் களில் இது போன்ற முறைகேடுகள் நடை பெறாமல், உரிய கண்காணிப்பை செலுத்து கிறோம் எனவும், சம்பந்தப்பட்ட அறக்கட் டளை மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக் கப்படும் வங்கி மேலாளர் உறுதி அளித்தார். மேலும், வங்கி அனுமதித்த அளவுக்கு அதிக மான பணங்களை மக்களிடம் இருந்து பெற்ற அறக்கட்டளை அதனை திருப்பி தருவதற் கான நடவடிக்கையை மேற்கொள்கிறோம், என்றார். இதுகுறித்து பந்தலூர் ஏரியாக் கமிட்டி யின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, உங்களுக்கு கடன் பெற்று தருகிறோம் என்று அணுக கூடிய யாராக இருந்தாலும் அவர்கள் கேட்கின்ற தொகையை அவர்களிடம் கொடுக்க வேண் டாம். உங்களுக்கு ஏதேனும் இது தொடர்பாக சந்தேகம் ஏற்படும் பொழுது உடனடியாக வங்கி மேலாளரை அணுகி தீர்வு எட்டப்பட வேண்டும். பொதுமக்கள் நலனுக்காக மேற் கண்ட திட்டத்தின் மூலம் வழங்கப்படும் குழு கடன்களை முழுமையாக வாங்கி பயன் பெற்று முழுமையாக திருப்பி செலுத்த வேண் டும். உங்களிடம் கடன் பெற்று தருவதற்கு யாரேனும் ஏதேனும் அறக்கட்டளையின் பெயரை சொல்லி உங்களிடம் வரம்புக்கு அதிகமான பணம் வசூல் செய்தால், உடனடி யாக வங்கி மேலாளரையும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் அணுகி புகார் தெரி விக்க வேண்டும். இந்தியன் வங்கி பந்தலூர் கிளை இனி வரும் காலங்களில் இது போன்ற மக்களிடம் சுரண்டலை கையாளும் அறக்கட்டளை நிர் வாகிகளை விடுவித்து, மக்கள் நலன் காக்க திறம்பட செயல்படும் எண்ணற்ற அறக்கட்ட ளைகள் இந்த ஊரில் இருக்கின்றன. அவர் களை கண்டறிந்து இந்தியன் வங்கி தங்களது திட்டங்களை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.