கரூர் மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பாக, முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் “உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 தெருமுனை பிரச்சார விழாவினை” வெள்ளியன்று கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் துவக்கி வைத்து, புதிய தொழில் புரிவோர்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை வழங்கினார். உடன் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி உள்ளிட்டோர்.