தமிழ்நாடு அரசு வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தியதை கண்டித்து திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகே சிஐடியு சார்பில் மாவட்ட துணைச் செயலாளர் லெனின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட நிர்வாகிகள் உ.ராமச்சந்திரன், ஏகே.செல்வம், கேபி.ஜோதிபாசு, முரளி, பவுன்ராஜ், லிகாய் அம்பிகாபதி, வேணுகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.